ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய படங்களின் அப்டேட்டுகள் கடந்த ஒரு வாரமாகவே வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் பார்வையை வெளியிட்டார்கள்.
நேற்று சூர்யாவின் 40வது படமாக அழைக்கப்பட்டு வந்த படத்தின் தலைப்பாக'எதற்கும் துணிந்தவன்' என்பதை அறிவித்தார்கள். இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.
இன்று மாலை சூர்யாவின் 39வது படத்தின் முதல் பார்வையை வெளியிட உள்ளார்கள். பொதுவாக வரிசையாகத்தான் படங்களின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், சூர்யா கடந்த சில வருடங்களில் சிவா இயக்கத்தில் நடிக்க வேண்டிய படம், ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ஆகியவற்றால் அவர்களது படங்களின் வரிசையில் குழப்பம் நீடித்தது.
எனவே தான் 40வது படத்தின் அறிவிப்புக்குப் பிறகு 39வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சூர்யாவின் 40வது படம் 'எதற்கும் துணிந்தவன்', 41வது படம் 'வாடிவாசல்'. இவற்றிற்கு அடுத்து சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. ஹரி - சூர்யா இணைவதாக அறிவிக்கப்பட்ட 'அருவா' படம் நடக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.