இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
நடிகர் விஷால் - து.பா.சரவணன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. விஷாலின் 31வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
கொரானா ஊடரங்கு தளர்வு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டிருந்தார் விஷால் இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இதில் விஷாலை ஒருவர் தாக்க, பின்புறமாக ஒரு இடத்தில் சாய்ந்து விழுகிறார். அப்போது முதுகில் காயம் ஏற்பட்டு வலியால் துடிக்கிறார் விஷால். அதன்பிறகு உடனடியாக மருத்துவர் அணுகி பரிசோதித்த பிறகு பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் தடைப்பட்டது.