விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
தெலுங்கில் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் படம் 'சாகுந்தலம்'. குணசேகர் இயக்கி வரும் இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். காளிதாஸ் எழுதிய 'சாகுந்தலா'வை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. துஷ்யந்த் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அனுசுயா கதாபாத்திரத்தில், 'அருவி' படத்தில் நடித்த அதிதி பாலன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தில் கூடுதலாக ஒரு ஸ்டார் அட்ராக்ஷன் இணைக்கப்பட்டிருக்கிறார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா, 'பரதா' கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று முதல் அர்ஹா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அடுத்த பத்து நாட்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.
இதன் மூலம் அல்லு குடும்பத்தில் நான்காவது தலைமுறையிலும் நடிக்க வந்துவிட்டார்கள். அர்ஹா சினிமாவில் நடிக்க வந்துள்ளதற்கு தெலுங்குத் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.