ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் |
ஹீரோ, வில்லன் என மாறுபட்ட கோணங்களில் தன்னை வெளிப்படுத்தி வருபவர் விஜய் சேதுபதி. அதோடு தற்போது அவர் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சியின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது : என்னைப் பொறுத்தவரை திரைப்படங்கள், வெப்சீரிஸ் இரண்டையுமே ஒரே மாதிரியாகத் தான் நினைக்கிறேன். ஒரே மாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்துகிறேன் என்றார்.
ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது இலக்கு எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்விக்கு ‛‛எனது வாழ்க்கையில் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்ற எந்த திட்டமிடலும் இல்லை. என் இதயம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட்டு வருகிறேன். நான் எடுக்கும் முடிவுகள் தவறாக இருந்தாலும் அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்கிறேன்'' என்றும் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.