பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான நான்கு சங்கங்கள் தான் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் கில்டு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என நான்கு சங்கள் தான் அவை. இவற்றோடு டிஆர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் உள்ளது. இந்த சங்கம் செயல்படுகிறதா இல்லையா என்பது வெளியில் தெரியாமல் உள்ளது.
இவற்றில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் சில முக்கியமான பெரிய தயாரிப்பாளர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த சங்கம் தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றை அந்த சங்கத்தினர் மறுத்துள்ளனர்.
இது குறித்து டுவிட்டர் தளத்தில், “செய்திகள் தவறானவை. எங்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக நாங்கள் தனித்த சங்கமாகத்தான் தொடர்ந்து செயல்படுவோம். அதே சமயம் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரச்சினைகளுக்காக சேம்பர், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் நாங்கள் தனித்தே இருப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து தாய் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்தான் முதல்வரை சில முறை சந்தித்துள்ளனர்.