‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பெரும் வெற்றி பெற்ற கே.ஜி.எப் படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாராகிறது. படத்தை வாங்க ஓடிடி தளங்கள் இடையே கடும் போட்டி நிலவும் நேரத்தில் படத்தின் இசை உரிமம் 7 கோடியே 20 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளின் இசை உரிமையை லஹரி மற்றும் டி-சீரிஸ் நிறுவனம் இணைந்து வாங்கி உள்ளது.
படம் கட்டாயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று ஏற்கெனவே தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது.