படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தான் அவர்களது கவனத்தை பெறுவதற்காக ஏதேதோ சாகசங்களை செய்வார்கள் என்றால், சில நடிகைகளின் ரசிகர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடவே செய்கின்றனர். அந்தவகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திப்பதற்காக அவரது தீவிர ரசிகர் ஒருவர் 900 கிமீ பயணித்து அவரது வீட்டை தேடி வந்துள்ளார்.
ஆனாலும் ராஷ்மிகா தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த ரசிகரின் நோக்கம் நிறைவேறாமல் போனது.. கூகுள் மேப்புடன் ராஷ்மிகாவின் வீட்டை அவர் தேடிக்கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரை அழைத்து அறிவுரை கூறி அவரது ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தி ராஷ்மிகாவின் கவனத்திற்கு வரவே இதுகுறித்து வருத்தப்பட்டுள்ள அவர், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “உங்களில் ஒருவர் என்னை சந்திக்க ரொம்ப தொலைவு பயணித்து வந்ததாக கேள்விப்பட்டேன்.. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். அந்த ரசிகரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிகிறது. தயவுசெய்து இதுபோல யாரும் என்னை தேடி வரவேண்டாம்.. நானே உங்களை நேரில் சந்திக்கும் ஒருநாள் வரும். அப்போது சந்திப்போம்” என கூறியுள்ளார்..