ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவில் எவ்வளவோ படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. சில பெரிய நடிகர்களின் படங்களே கூட படுதோல்வி அடைந்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த 'அஞ்சான்' படத்தின் தோல்வியைப் பற்றி இன்னமும் பலர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்த போது கூட ரஜினிகாந்திற்கு 'பாபா', விஜய்க்கு 'சுறா', சூர்யாவுக்கு 'அஞ்சான்' போல தனுஷுக்கு 'ஜகமே தந்திரம்' என சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.
'அஞ்சான்' தோல்வியிலிருந்து மீண்டு 'சண்டக்கோழி 2' படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தாலும் அப்படமும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் எப்படியோ தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
இன்று அப்படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ராம். டுவிட்டரில், “கடைசி கட்ட கதை முடிந்தது. எப்படி... லிங்குசாமி சார் லவ் யூ, சூப்பர் டூப்பர் கிக்டு....நான் சொல்றேன் கேமராவை ரோல் பண்ணுங்க,” என பெரும் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க 'உப்பெனா' நாயகி கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.