படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
நடிகை ஹன்சிகாவின் 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார். மதியழகன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் மதியழகன் முயற்சி செய்தார்.
இதற்கிடையில் தனக்கு தெரியாமல் படத்தின் காட்சிகளை மாற்றி அமைத்தும், எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தராமலும் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குனர் யு.ஆர்.ஜமீலுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 5 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.