ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோதே ராஜ்கிரணை வைத்து ப.பாண்டி என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார் தனுஷ். அதையடுத்து நாகார்ஜூனாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியவர் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
இந்நிலையில் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிப்படங்களிலும் நடித்து மிகப்பெரிய நடிகராகி விட்டார். கடந்த மூன்று மாதங்களாக தி கிரேமேன் படத்திற்காக அமெரிக்காவில் முகாமிட்டு நடித்து வந்த தனுஷ், சமீபத்தில்தான் அந்த படத்தில் நடித்து முடித்தார். தான் நடித்து வெளியான கர்ணன் படத்தை கூட அவர் அமெரிக்காவில் உள்ள தியேட்டரில் தான் பார்த்தார்.
இப்படியான நிலையில் தனுஷ் மீண்டும் படம் இயக்குவது எப்போது? என்பது குறித்த ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன், ராம் குமார் என பல திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறேன். அவர்கள் சொன்ன கதைகள் எனை பெரிய அளவில் பாதித்து விட்டதால் அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதனால் தான் மீண்டும் டைரக்சனில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இருப்பினும் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் தனுஷ்.