பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
2020ம் ஆண்டு கொரோனா முதல் அலை பரவிய உடனேயே தியேட்டர்கள் மூடப்பட்டன. பொழுதுபோக்கிற்கு ஏங்கித் தவித்த மக்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வடிகாலாக அமைந்தன. பழைய படங்களைத் திரும்பவும் பார்த்த மக்களுக்கு புதிய படங்களையே நேரடியாக தங்கள் தளங்களில் வெளியிட வைத்து ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தன ஓடிடி நிறுவனங்கள்.
கடந்த வருடம் மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடியில் வெளிவந்தன. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் மூன்று வார காலமாகியும் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் நேரடியாக வெளியாகவில்லை.
ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்திலும் தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதற்காக பல படங்களை திட்டமிட்டிருந்தார்கள். இப்படி இரண்டாவது அலை வந்து தாக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. தியேட்டர்கள் வெளியீடு என்பதை வைத்துத்தான் சாட்டிலைட் டிவி மற்றும் ஓடிடி வெளியீடு ஒப்பந்தங்களை பல தயாரிப்பாளர்கள் போட்டுள்ளார்கள்.
திடீரென ஓடிடியில் நேரடி வெளியீடு என்றால் ஏற்கெனவே போட்ட ஒப்பந்தங்களை மாற்ற வேண்டும். அதில் சில பல சிக்கல்கள் இருப்பதால்தான் ஓடிடி தளங்களில் கடந்த மூன்று வார காலமாக நேரடியாக எந்தப் படமும் வெளியாகவில்லை என்கிறார்கள்.
பல படங்கள் அவர்களது ஒப்பந்தங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களாம். தியேட்டர்களைத் திறக்க எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும் என்பதுதான் தற்போதைய நிலைமை. ஜுன் மாதத்திலிருந்து சில பல புதிய படங்களின் நேரடி வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் எனத் தெரிவிக்கிறார்கள்.