என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம் | ஓடிப்போனவளா? ஷகிலாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | பைனான்சியல் திரில்லர் படத்தில் பிரியா பவானி சங்கர் |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி ஹீரோக்கள் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர்கள் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் ஆகியோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. நடிகர் பவன் கல்யாண் ஐதராபாத் புறநகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து குணமடைந்தார்.
நடிகர் அல்லு அர்ஜுன், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என அவர் அறிவித்துள்ளார்.
“15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் எனக்கு நெகட்டிவ். ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த ஊரடங்கு கேஸ்களை இன்னும் குறைக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கிறேன். வீட்டில் பத்திரமாக இருங்கள், உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜுனியர் என்டிஆர் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.