சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளின்படி பலரும் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டு, இரண்டாவது தடுப்பூசி போடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சிலரோ தடுப்பூசி குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் நடிகை நதியா, பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் தற்போது போட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மும்பை நகராட்சி மருத்துவமனையில் ராஜ மரியாதையுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். மருத்துவ சுகாதார பணியாளர்களும், களப்பணியாளர்களும் ஓய்வில்லாமல், சுயநலமில்லாமல் இந்த தேசத்துக்காக பணியாற்றுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மும்பை மாநகராட்சிக்கு ஹேட்ஸ் ஆப். தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் நதியா.