படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‛கர்ணன்'. இப்படத்திற்கு ஒரு பக்கம் சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதுடன் படத்தின் வசூலும் நன்றாக இருந்தது. அதேசமயம் மற்றொரு தரப்பில் இப்படம் சாதிய ரீதியான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் மாரி செல்வராஜ் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதற்கான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். பீரி-புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன. அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கும்'' என தனுஷ் தெரிவித்துள்ளார்.