விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
கடந்த வருடம் இதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தாக்கம் பரவியபோது, பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த செலவில் பல விதமான உதவிகளை செய்தவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதன்மூலம் ரியல் ஹீரோ என மக்களிடம் பெயர் பெற்ற சோனு சூட், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் இந்த சூழலிலும், சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான போன் அழைப்புகளும் சோஷியல் மீடியாவில் கோரிக்கைகளும் வருகிறதாம். அதேசமயம் இந்தமுறை நாடு முழுதும் உள்ள மக்கள் அனைவரும் உதவிக்கு அழைக்கும் விதமாக ஒரு டோல் ப்ரீ நம்பரை ஏற்படுத்தி, ஒரு சிஸ்டம் மூலம் உதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் சோனு சூட். இதன்மூலம் எங்கெங்கே ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை படுக்கை வசதிகள் அதிகம் கிடைக்கின்றன என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தெரிவித்து உதவி செய்வதுதான் அவரது புதிய திட்டமாம்.