புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கொரோனா பரவலின் அடுத்த கட்ட தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் தியேட்டர்களையும் இரவு நேர ஊரடங்கு சிக்கலில் தள்ளியுள்ளது. அதன் காரணமாக இரவுக் காட்சிகளை நடத்த முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இருந்த நிலையில் இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் தான். அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. இதனால் படங்களின் வசூல் மிகவும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தலைவி, எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்களை தள்ளி வைத்துவிட்டார்கள். இதனிடையே, இரவுக் காட்சிகள் இல்லை, ஞாயிறு காட்சிகள் இல்லை என்பது தங்கள் தொழிலை மிகவும் பாதிக்கும் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள்.
தற்போது அவர்கள் ஜும் மீட்டிங் மூலம் ஆலோசித்து வருகிறார்கள். தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதாக என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம்.