படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் தடைபட்டிருந்த ரஜினிகாந்தின் அண்ணாத்த படம், மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியபோது, படக்குழுவினர் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இயக்குனர் சிவாவும் ரஜினியும் படப்பிடிப்பு தளத்தில் பேசிக்கொண்டு இருப்பது போல, , சில் அவுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளிஇட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வராமல் கடைசி நேரத்தில் தவிர்த்து ஏமாற்றம் அளித்தாலும், ஆரோக்கியமான உடல்நலத்துடன் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவது குறித்து, ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.