பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
ஒரு காலத்தில் ரஜினி, கமல் நடித்த படங்கள் தீபாவளி அன்று வெளியானால் இருவரின் ரசிகர்களுக்குமே அது டபுள் தீபாவளியாக இருக்கும். கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன் படம் வெளியான தீபாவளி அன்று தான் ரஜினி நடித்த ஆறிலிருந்து 60 வரை படம் வெளியானது. ரஜினி நடித்த மனிதன் படம் தீபாவளி ரிலீஸாக வெளியானது. அதே நாளில் கமல்ஹாசனின் நாயகன் படமும் வெளியானது. கடைசியாக ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் ஊரடங்கு காலத்திலேயே படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தையுமே முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. மே 3ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி, 100 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தையும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஜினி - கமல் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். என்று தெரிகிறது. என்றாலும் இது நடப்பது கொரோனாவின் கையில்தான் இருக்கிறது.