தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தற்போது மணிரத்னம் இயக்கும் கடல் மற்றும் சீனுராமசாமி இயக்கும் நீர்ப்பறவை ஆகிய இரண்டு படங்களுமே கடல்சார்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளன. ஆனால் மணிரத்னத்தின் மேக்கிங் ஸ்டைல் என்பது வேறு மாதிரியாக இருக்கும் என்பதால், என்னதான் இரண்டு கதையிலும் ஒரே மாதிரியான நெடி அடித்தாலும், கதையோட்டம், காட்சி அமைப்புகள் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்பதை இரண்டுதரப்பினருமே யூகித்துக்கொண்டார்கள்.
ஆனால் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மரியான் படமும் இதேபோன்று கடல்சார்ந்த மக்களின் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறது. அதனால் கடல், நீர்ப்பறவை படங்களில் சாயல் இருந்தால் அதை நீக்கி விட்டு புதுமையான காட்சிகளை புகுத்திவிட வேண்டும் என்று மேற்படி படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்கள். அதன்காரணமாகத்தான், மரியான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ், இப்போது ராஞ்சனா இந்தி படத்தை முதலில் முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் தமிழுக்கு வரலாம் என்று மும்பையில் முகாமிட்டுள்ளார்.