சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகிறார்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நயன்தாராவைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதென செய்திகள் பரவி வருகின்றன. அது குறித்து இருவருமே எந்த ஒரு மறுப்பையும் வெளியிடவில்லை.
அவர்களது காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. இரு வீட்டாரும் ஏற்கெனவே சம்மதம் சொல்லிவிட்டனர். நயன்தாரா 36 வயதைக் கடந்துவிட்டார். எனவே, இனிமேலும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாமென நயன்தாரா நினைக்கிறாராம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவாவைக் காதலித்த போது இந்து மதத்திற்கு மாறினார். காதலர் விக்னேஷ் சிவனுடன் பல கோயில்களுக்கும் சென்று வந்தார். அவர்களது திருமணம் எந்த முறைப்படி நடக்கும், எங்கு நடக்கும் என்பது குறித்தும் முடிவெடுத்துவிட்டார்களாம். விரைவில் அவர்களது திருமணத் தேதி பற்றி அறிவிப்பு வெளியிடலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.