விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'காடன்'.. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் மும்மொழிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் தெலுங்கில் 'ஆரண்யா' என்றும் இந்தியில் 'ஹாத்தி மேரே சாத்தி' என்கிற பெயரிலும் வரும் மார்ச்-26 அன்று ஒரே நாளில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்தி பதிப்பான 'ஹாத்தி மேரே சாத்தி'யின் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அம்மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவு போட்டுள்ளது.
இந்த உத்தரவு ஒருபக்கம், கொரோன அச்சத்தால் தியேட்டருக்கு மக்கள் வர அஞ்சுவது இன்னொரு பக்கம் என, இந்த சமயத்தில், 'ஹாத்தி மேரே சாத்தி' வெளியானால் மிகப்பெரிய வசூல் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இதன் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அதேசமயம் தமிழ் மற்றும் தெலுங்கில், ஏற்கனவே அறிவித்த தேதியில் (மார்ச்-26) இந்தப்படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை.