ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைக் கேட்டுள்ளார்கள். இப்படத்தில் தமிழர்களைப் பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், அதனால்தான் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியது.
தற்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகர் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ஆதி, தனஞ்செயா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்போது, பஹத்தும் வந்துள்ளதால் நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் இப்படம் மேலும் பிரம்மாண்டமாகி உள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு ஏற்கெனவே கேரளாவில் தனி மார்க்கட் உண்டு. தற்போது பஹத்தும் நடிப்பதால் மலையாளத்தில் இப்படத்திற்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக உள்ளது.