ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியின்றி தலைவராக பாரதிராஜா முயற்சித்தார். அது நடக்காததால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற போட்டி சங்கத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினார்.
நிர்வாகிகள் இன்றி தனி அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக முரளி ராமசாமி வெற்றி பெற்றார். பெரும்பாலான பொறுப்புக்கு அவரது அணியினர் வந்தனர்.
ஒரே ஒரு தயாரிப்பாளர் சங்கம் தான் இருக்க வேண்டும். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள் தாய் சங்கத்தில் வந்து சேருமாறு புதிய நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதனை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தாய் சங்கம். கொரோனா பரவல் நேரத்தில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கினார். தற்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாய் சங்க நிர்வாகம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக இருந்து கொண்டு போட்டியாக சங்கம் நடத்துவது முறையல்ல. எனவே பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விளக்கம் பெற்ற பிறகு சங்க விதியின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும். என்றார்.