ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திரையுலகம் கொரானோ தாக்கத்தில் இருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட கூட்டம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வந்தால் மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்ற ஆர்வத்தில் திரையுலகினர் இருந்தார்கள். ஆனால், ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு முன்னர் திட்டமிட்ட புதிய படங்களின் வெளியீடுகளை மாற்றும் எனத் தெரிகிறது.
மார்ச் மாதக் கடைசி வாரத்தில் கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது சந்தேகம்தான். மேலும், திரைப்பட போஸ்டர்களை ஒட்ட சுவர்கள் கூட கிடைக்காது, அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
எனவே, மார்ச் 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'டாக்டர்', ஏப்ரல் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'கர்ணன்' ஆகிய படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் வரலாம் எனச் சொல்கிறார்கள்.