சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடமிருந்து ரூ. 70 லட்சத்தை நடிகர் ஆர்யா வாங்கியதாகவும், அதை திருப்பித்தர மறுப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரினை தமிழக உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் கோபால்ஜா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் ஆகியோருக்கு அந்த புகாரை அனுப்பியுள்ளார் விட்ஜா.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் தற்போது ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறேன். கொரோனா சமயத்தில் தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்ன நடிகர் ஆர்யா, என்னிடத்தில் ரூ.70 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கினார். அதோடு தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னவர், பின்னர் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து ஆர்யாவிடம் கேட்டபோது தன்னை தவறான வார்த்தைகளில் திட்டினார். நான் இந்த மோசடி குறித்து புகார் கொடுப்பேன் என்று சொன்னபோது, அப்படி செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஆர்யா நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரபரப்பு செய்திகள் வெளியானபோதும் இன்னமும் ஆர்யாதரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நடிகர் ஆர்யா 2019ஆம் ஆண்டில் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த பாலிவுட் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.