விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தவகையில் அவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள தயாராகி விட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
இந்த நிலையில், தற்போது வருகிற மார்ச் மாதத்தில் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நேற்று முதல் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பாகி வருகிறது. ஆனால் வழக்கம்போல் இந்த செய்தி குறித்து அவர்கள் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதனால் இந்த செய்தியாவது உண்மையாகுமா? இல்லை இதுவும் வழக்கம்போல் வதந்திதானா? என்பது விரைவில் தெரியவரும்.
மேலும், நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகும் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, அவர்கள் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பேனரில் சில சிறிய பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.