Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி | படப்பிடிப்பில் பிரித்விராஜிடம் இருமுகம் காட்டும் மோகன்லால் | விவாகரத்து செய்தி - நமீதா கொடுத்த விளக்கம்! | ஓடிடியால் தியேட்டருக்கு செல்லும் மனநிலை குறைந்து வருகிறது! -ஹிப் ஹாப் ஆதி பேச்சு | மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை | 3வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவன்! | மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது! | 2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாங்கள் போடும் பாடலை கேட்பதே உங்கள் தலையெழுத்து : இளையராஜா

03 பிப், 2021 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-New-studio-opened-at-chennai

சென்னை : ‛‛மழை கொட்டும் நேரத்தில் கொட்டும் அது எப்படி கொட்டும் என சொல்லமுடியுமா? அப்படித்தான் பாடலும் அந்தந்த சமயத்திற்கு ஏற்றபடி பாடல் உருவாகும். அதை கேட்பதே உங்கள் தலையெழுத்து, என இளையராஜா கூறினார்

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டூடியோ ஒன்றை திறந்தார். முதல் பாடலாக வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு ஒலிப்பதிவு செய்தார். வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.



பின் இளையராஜா அளித்த பேட்டி: பன்மொழிப்படங்கள் தயாராகும் சென்னையில் இருந்தத ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக விஜயா வாஹினி இருந்தது. அந்த ஸ்டூடியோ இன்று இல்லை. ஜெமினி, சாரதா, கோல்டன், ஏ.வி.எம்., ஸ்டூடியோ, விஜயா கார்டன் என பல ஸ்டூடியோக்கள் இன்று இல்லை. இந்த வரிசையில் பிரசாத் ஸ்டூடியோவும் சேர வேண்டும் என வெளியே வந்துவிட்டேன். என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி, ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளேன். இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளது. அதன் பின் பாடல் ஒலிப்பதிவு முழுவீச்சில் தொடர்ந்து நடக்கும்.



கடந்து வந்த வாழ்க்கைக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. அது இப்படித் தான் கொட்டும் என சொல்ல முடியுமா? எந்தச் சமயத்தில் இசை எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அதுதான் அவர்களின் தலையெழுத்து; மாற்ற முடியாது.



இன்றைய காலத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவமில்லை. பாடல்தான் முக்கியத்துவத்தை எடுக்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல்கள் ரசிகர்களைப் பிடித்து இழுக்க வேண்டும்.

இவ்வாறு, இளையராஜா கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கணவர் நடிக்கும் மலையாள ரீமேக்கை இயக்குகிறார் ஜீவிதாகணவர் நடிக்கும் மலையாள ரீமேக்கை ... எம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு எம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in