'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா |
ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது தான் இப்போதைய புதிய டிரண்ட். அந்த வரிசையில் அடுத்து வில்லனாக நடிக்க இருக்கிறார் விஷால். அதுவும் இங்கல்ல பாலிவுட்டில்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஷால் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படம் வெற்றி பெற்றது. இதில் சமந்தா ஹீரோயின், அர்ஜூன் வில்லன். பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். விஷால் ராணுவ வீரராகவும், அர்ஜூன் சைபர் க்ரைம் டானாகவும் நடித்திருந்தார். விஷால் கேரக்டருக்கு இணையாக அர்ஜூன் கேரக்டரும் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தின் கதையை மித்ரன் விஷாலிடம் சொன்னபோது அதில் வில்லன் கேரக்டரில் நடிக்கத்தான் விஷால் ஆசைப்பட்டார். ஆனால் மித்ரன் நீங்கதான் ஹீரோ என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் வில்லனாக நடிக்க அப்போது ஆர்யாவிடம் பேசப்பட்டது. அவர் மறுத்து விடவே அதன் பிறகு அர்ஜூன் நடித்தார்.
இப்போது இரும்புத்திரை இந்தியில் ரீமேக் ஆகிறது. விஷால் பிலிம் பேக்டரியும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என்று தெரிகிறது. இதில் விஷால் நடித்த கேரக்டரில் சல்மான்கானும், அர்ஜூன் நடித்த வில்லன் கேரக்டரில் விஷாலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. காரணம் சல்மான்கான் நடிக்கும் பட்சத்தில் அவர் படத்தின் வில்லனை அவர் தான் தேர்வு செய்வார். இந்தி பேசும் மக்களுக்கு அதிக அறிமுகம் இல்லாத விஷால் நடிக்க அவர் ஒப்புக் கொள்வரா என்று தெரியவில்லை.