‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் படம் அரண்மனை-3. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசிகண்ணா, சாக்ஷிஅகர்வால், விவேக், யோகிபாபு என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இப்படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அரண்மனை-3 படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருப்பதோடு, அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும், நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட அவர்கள் இருவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.