ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தாலும் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் விரக்தியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் வேலையிலோ, உங்கள் படிப்பிலோ அல்லது ஒருவரை காதலித்து அவருடன் உறவு கொள்வதிலோ இல்லை என்பது ஒரு நாள் உங்களுக்கு புரியும். நமக்கு முன்னே நடந்து சென்றவர்களின் காலடிகளை பின்தொடர்ந்து செல்வதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. மற்றவர்களை போல் நாம் நடந்துகொள்வதால் ஒருபோதும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படாது. புதிய விஷயங்களை தேடி கண்டறிவதிலும், நம்பிக்கையிலும், நம் மனது சொல்வதை கேட்டு அதன்படி நடந்துகொள்வதிலும் தான் இருக்கிறது. நமக்கு நாம் கருணையாக இருக்கும் போது தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது எப்போதும் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை பொருத்தே அமையும். நமது மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை.. அது நாம் நாமாக வாழும் போது தான் கிடைக்கிறது. மகிழ்ச்சி என்பது உங்களை பொருத்தே அமைகிறது", என விக்னேஷ் சிவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.