‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எனக்கு அரசியல் நெருக்கடிகள் இப்போது இல்லை; இனி சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்துவேன், என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக பிரசாரம் செய்ய திமுக சார்பில் அரசியல் களமிறக்கப்பட்ட வடிவேலு, தேர்தலுக்குப் பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்ற செய்திகளை மறுத்து வந்த அவர், ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக கூறி வந்தார்.
இந்நிலையில் மீண்டும் திரைத்துறையில் களமிறங்க தயாராகியுள்ளார் வடிவேலு. அவர் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். ஓய்வில் இருந்த நாட்களில் வாழ்க்கையை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இயக்குனர்களிடமும் தொடர்பில் இருந்தேன். சில கதைகள் பற்றியும் விவாதித்தேன். தற்போது மீண்டும் கலக்க வந்துள்ளேன்.
சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். பூபதிபாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை. இனி சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன், என்று கூறியிருக்கிறார்.