‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கொரோனா தொற்று பரவிய காலத்தில் இந்தியத் திரையுலகில் உள்ள மற்ற முன்னணி நடிகர்களை விட வில்லன் நடிகரான சோனு சூட் பல்வேறு உதவிகளைச் செய்தார். அவருடைய சேவை மனப்பான்மைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து மனதாரப் பாராட்டினார்கள்.
சோனு சூட் சேவையால் ஈர்க்கப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரான 'டேன்க்பன்ட் சிவா' என்பவர் சோனு சூட் பெயரால் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து தத்தளித்த நூற்றுக்கணக்கானவர்களைக் காப்பாற்றியும், மூழ்கி இறந்து போனவர்களின் சடலங்களை மீட்டுத் தரும் சேவையைச் செய்பவர் சிவா. அவருக்கு மக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்துள்ளார்.
“சோனு சூட் சேவை எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதனால்தான் அவரது பெயரைச் சூட்டினேன்,” என சிவா தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைத்துப் பேசிய சோனு, “இந்த ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைப்பது எனக்கு பெருமையாக உள்ளது. சிவாவைப் பற்றியும், அவரது சேவையைப் பற்றியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். அவரைப் போன்ற பல சிவாக்கள் நமக்குத் தேவை. ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.