விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
'செக்கச் சிவந்த வானம்' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரபல நாவல் ஒன்றின் கதையை கருவாக வைத்து, புதிய படம் தயாரிக்கும் பணியில், இயக்குநர் மணிரத்னம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே திட்டமிட்டு, ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிக் கொண்டே போன 'பொன்னியின் செல்வன்' கதையையே மீண்டும் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கும் மணிரத்னம், அவர்கள் படத்தில் நடிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட கேரக்டர்களில் நன்கு தயாராக வேண்டும் என்பதால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பொன்னியின் செல்வன் கதையை அனுப்பி படிக்கச் சொல்லி இருக்கிறார்.
பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்தப் படத்தை, அடுத்தாண்டு துவக்கத்தில் இருந்து துவங்கவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.