‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து, சினிமா நடிகர் ஆனவர் சீனிவாசன். தனக்குத்தானே பவர் ஸ்டார் பட்டம் போட்டுக் கொண்டு காமெடியனாக படங்களில் நடித்து வந்தார். கடன் வாங்கித் தருவதாக பலரிடம் வாக்குறுதி கொடுத்து பல கோடி ஏமாற்றியதாக இவர் மீது பல வழக்கு உள்ளது. அடிக்கடி ஜெயிலுக்கும் போவார். அடிக்கடி படங்களில் நடிக்கவும் செய்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசனின் மனைவி ஜூலி, தனது கணவரை காணவில்லை என்று அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, சீனிவாசன் தான் ஊட்டிக்கு வந்திருப்பதாகவும், நிலபத்திர பதிவு செய்ய வேண்டியதன் காரணமாக வந்திருப்பதாகவும் போலீசுக்கு தெரிவித்திருக்கிறார். மனைவி ஜூலியும் தன்னுடன் தான் இருக்கிறார் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சீனிவாசன் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினர். மேலும் தனது மனைவி ஜூலியை கடத்தி ஊட்டியில் 11 பேர் சிறை வைத்துள்ளதாக போலீசாரிடம் புகார் கூறியுள்ளார் சீனிவாசன். இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஊட்டியில் இருந்த ஜூலியை மீட்டதோடு, இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.