‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இத்தாலியில் நடந்த இந்த திருமணம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்தது. அவரது சக போட்டியாளரான பிரிங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்தார். தற்போது திருமணம் செய்ய இருக்கிறார்.
வருகிற டிசம்பர் 1ந் தேதி இந்த திருமணம் நடக்க இருக்கிறது. தீபிகாவின் திருமணத்திற்கு கொஞ்சம் குறைவில்லாமல் நடக்க வேண்டும் என்பது பிரியங்காவின் ஆசை. இதற்காக ஜோத்பூரில் உள்ள பிரபலமான அரண்மனையை தேர்வு செய்துள்ளார். அந்தக் காலத்தில் ராஜபுதனத்து மன்னர்கள் வீட்டு திருமணம் எப்படி நடக்குமோ அதுபோன்று நடத்த முடிவு செய்திருக்கிறார். அதற்கான வேலைகள் இப்போதே அரண்மனையில் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு நிக் ஜோனாசின் உறவினர்கள் தனி விமானத்தில் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு 7 நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமண நிச்சயதார்த்தத்தின் போதே, நிக் ஜோன்ஸ், பிரியங்காவுக்கு சுமார் 2 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் பரிசளித்தார். சமீபத்தில் சுமார் 10 கோடி மதிப்புள்ள திருமண நகைகள், உடையை தேர்வு செய்துள்ளார் பிரியங்கா.
திருமணத்துக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறாரரோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது. திருமண நிகழ்ச்சியை படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமத்தை மட்டும் 18 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார் பிரியங்கா.