‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி, மீ டூ சர்ச்சையை பலமாகக் கிளப்பினார். அது தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது. அவர்கள் இருவருடனும் தனது இசையமைப்பில் பல சூப்பர் ஹிட் பாடல்களை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர்களிருவருக்கும் இடையிலான சர்ச்சை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் என்ன நினைக்கிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. நேற்று பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரைஹானா இது பற்றி கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்.
வைரமுத்து, சின்மயி இருவர் மீதுமே ரைஹானா குற்றம் சாட்டினார். வைரமுத்து பற்றி தானும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். சின்மயி பற்றி பேசும் இத்தனை ஆண்டு காலம் அவர் இதுப்பற்றி பேசாதது ஏன்.? தவறு செய்யும்போதே அதை சுட்டிக்காட்டியிருந்தால் இவ்வளவு தூரம் இந்த விஷயம் வளர்ந்திருக்காது. சின்மயி, அவரது அம்மா இருவரும் எதற்கும் அஞ்சாதவர்கள், தைரியமானவர்கள். தன்னிடமும் ஒரு நிகழ்ச்சிக்காக சண்டை போட்டார்வர்கள். ரஹ்மானின் சகோதரியிடம் சண்டை போட்டவர்கள், வைரமுத்துவிடம் சண்டை போட முடியாதா.? என்றும் அந்தப் பேட்டியில் கூறினார்.
இந்த விவகாரம் பற்றி ரகுமான் என்ன கூறினார் என்றதற்கு, “சின்மயி இப்படி பலர் மீது குற்றம் சாட்டி வருகிறாரே, என்ன நடக்கிறது உண்மையா” என்று விசாரித்தார் என்றார். மேலும், சின்மயிக்கு இனி ரஹ்மான் பாட வாய்ப்பு தருவாரா என்ற கேள்விக்கு, சர்ச்சைக்குரியவர்களுக்கு ரஹ்மான் எப்போதுமே வாய்ப்பு தர மாட்டார் என்றார். வைரமுத்துவும், சின்மயியும் இப்போது மீ டூ சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள்.
அப்படியென்றால் இனி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடலும், சின்மயியும் பாட முடியாத நிலை ஏற்படும்.