மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தனியார் சாட்டிலைத் தொலைக்காட்சிகள் வந்த புதிதில் டிவியில் தொகுப்பாளர்களாகவே இருப்பவர்களையோ, தொடர்களில் நடிப்பவர்களையோ திரைப்படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள். அதை ஒரு குறைவான செயலாகவே கருதுவார்கள். அதே போல, சினிமாவில் நடிப்பவர்கள் டிவி பக்கம் வந்துவிட்டால் அவ்வளவுதான் அதன் பிறகு அவர்களை சினிமாவில் நடிக்க கூப்பிடவே மாட்டார்கள்.
இதெல்லாம் இப்போது எவ்வளவோ மாறிவிட்டது. சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, கமல்ஹாசன் என அடுத்தடுத்து பலரும் சினிமாவிலிருந்து டிவி பக்கம் வந்து வெற்றி பெற்றார்கள். அதனால், அவர்களது சினிமா இமேஜும் குறையவில்லை, மார்க்கெட்டும் குறையவில்லை. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கமல்ஹாசன் வந்த பிறகு டிவி மீது பலருக்கும் ஆர்வம் வந்துவிட்டது.
விஷால் 'நாம் இருவர்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்துவிட்டார். வரலட்சுமி 'உன்னை அறிந்தால்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி அடுத்த வாரம் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிரசன்னா, 'சொப்பன சுந்தரி' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகிவிட்டார்.
ஒரே சமயத்தில் இப்படி மூவர் சினிமாவிலிருந்து டிவிக்கு வந்தது ஆச்சரியம் தான். இருப்பினும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களே இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இவர்களுக்குப் பிறகு மேலும் சிலரும் டிவி பக்கம் வந்தாலும் வரலாம்.