ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த செப்-25ல் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் மற்றும் வயலினிஸ்ட்டான பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி, குழந்தை பயணித்த கார் திருவனந்தபுரம் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்கும் நினைவு திரும்பாத நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இசையமைப்பாளர் பாலா பாஸ்கரும் இறந்தார். இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டாத நிலையில் நினைவு திரும்பாத அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளை தொடர்ந்து தந்தையும் உயிரிழந்தது மலையாள திரையுலகில் இன்னு சோகத்தை அதிகமாக்கியுள்ளது.