‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் 'சர்கார்'. இப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இன்று மாலை மீதி பாடல்களுடன் மொத்த இசை வெளியீடும் நடைபெற உள்ளது.
'சர்கார்' படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களில் முதல் பாடலாக வந்த 'சிம்டாங்காரன்' பாடல் சென்னைத் தமிழ் வார்த்தைகள் அதிகம் இடம் பெற்றிருந்ததால் பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் பலரும் புலம்பினார். ரகுமானிடமிருந்து இப்படி ஒரு 'லோக்கல்' பாடலா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவ்வளவு விமர்சனங்கள் எழுந்தாலும் அந்தப் பாடல் யு டியூபில் பத்து நாட்களுக்குள் ஒன்றரை கோடி பார்வைகளையும், 6 லட்சத்திற்கும் மேல் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு வெளியான 'ஒரு விரல் புரட்சி' பாடலுக்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'மெர்சல்' பாடல்கள் போல முதல் முறை கேட்கும் போதே அதிரடியாக இல்லை என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். அனைவரது ஒப்பீடும் 'ஆளப் போறான் தமிழன்' பாடலுடனேயே உள்ளது. அந்தப் பாடலுக்கு அருமையான வார்த்தைகள் அமைந்தன. ஆனால், 'ஒரு விரல் புரட்சி'யில் அப்படி கேட்டதும் மனதில் ஒட்டிக் கொள்ளும் வரிகள் இல்லை என்பதும் உண்மை. ரகுமானும் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பாடல்களை இசைத்திருக்கிறார். இருப்பினும் இந்தப் பாடலும் இரண்டே நாட்களில் 50 லட்சம் பார்வைகளையும், 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த இரண்டு பாடல்கள் மீதான விமர்சனம் படத்தின் மொத்த பாடல்களும் இன்று வெளியான பின் மற்ற பாடல்களுக்கும் தொடருமா என்பதுதான் அடுத்த கேள்வி.