ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லால் மகன் பிரணவ் தனது முதல் படமான 'ஆதி' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது 'இருபத்தியொன்னாம் நூற்றாண்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அருண்கோபி இயக்கும் இந்தப்படத்தை 'புலி முருகன்' பட தயாரிப்பாளர் தோமிச்சன் முலக்குப்பாடம் தயாரித்து வருகிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் திலீப் திடீரென நேற்று முன்தினம் விசிட் அடித்தார். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இந்தப்படத்தை இயக்கிவரும் அருண்கோபி தான், திலீப் நடித்த ராம்லீலா படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர். அதுமட்டுமல்ல இதே தயாரிப்பாளர் தான் ராம்லீலா படத்தையும் தயாரித்தவர்.
இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் இந்தப்படம் வெளியாகி சரியாக இரண்டாவது ஆண்டு துவங்கிய நாளில் இங்கே வருகை தந்தது தான். அதேசமயம் கடந்த வருடம் இதே நாளில், நடிகையின் வழக்கில் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.