‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு விருது வழங்கும் விழாக்கள் நடந்து வருகின்றன. முக்கியமான சில நடிகர்கள், நடிகைகள் பணம் கொடுத்தாவது வரவழைத்து விடுகிறார்கள். இதற்காகவே சிலர் செயல்படுகின்றனர்.
முன்னணி நடிகைகளை அழைத்து வந்தால் அவர்களுக்குத் தரும் பணத்தில் இவர்களுக்கென தனியாக கமிஷன் தருகிறார்களாம். இது தெரியாமல் சில நடிகைகள் கூட விழாக்களுக்குச் சென்றுவிடுவதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொள்ள சென்றவர்களை விழாக் குழுவினர் ஒழுங்காகவே நடத்தவில்லையாம். பலருக்குத் தனியாக கார் கூட ஏற்பாடு செய்து தரவில்லையாம். மேலும் விழாவைப் பார்க்க குறைந்த அளவிலேயே கூட்டம் வந்துள்ளது.
சென்னையில் நடக்கும் திரைப்பட இசை விழாக்களுக்கே 500, 5000 பேர் வரும் நிலையில் ஒரு பெரிய விழா என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வுக்கு 150 பேர் மட்டுமே வந்தது அங்கு சென்ற நட்சத்திரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். இனிமேல், திரைப்பட விருது விழா என்றாலே கலந்து கொள்ள யோசிக்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்.