ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா நேற்று சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடையே இளையராஜா பேசியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தான் எனது ஊர். அங்கு இசை கற்க எந்த வாய்ப்பும் இல்லை. அண்ணன் வரதராஜன் கச்சேரி செய்வார். அவர் ஆர்மோனிய பெட்டியை தொட விடமாட்டார். பிறகு நானாக கற்றுக் கொண்டேன். சென்னைக்கு வரும்போது வீட்டில் இருந்து ரேடியோவை விற்று அம்மா 400 ரூபாய் கொடுத்தார். அதோடு சென்னை வந்தேன்.
கச்சேரி செய்ய வேண்டும், அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் ரோட்டில் அமர்ந்து பாடி மக்களிடம் பணம் வாங்கி வாழ வேண்டும் என்று தான் வந்தேன். அதன் பிறகான வாழ்க்கை உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். பின்னர் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து இளையராஜா பேசியதாவது:
எனக்கு ஆடம்பரத்தில் நம்பிக்கை கிடையாது. எளிமையாக வாழவே விரும்புகிறேன். நான் எத்தனை பாடல்களுக்கு இசை அமைத்திருந்தாலும் எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்த "மலைப்பொழுதின் மயக்கத்திலே நான்..." பாடல் தான் எனக்கு பிடித்த பாடல். பாடலுக்கேற்ற பாடகர்களை தேடுவேன். யாருமே கிடைக்காவிட்டால் நானே பாடி விடுவேன். கஷ்டப்பட்டு இசை அமைக்க கூடாது. கஷ்டப்பட்டு அமைத்தால் அது இசையே அல்ல. இசை இயல்பாக வர வேண்டும்.
சுயசரிதை எழுதும் எண்ணம் இல்லை. என் இசை தான் என் சுயசரிதை. அதை நாள்தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன். சுய தம்பட்டம் ஒருபோதும் சரித்திரம் ஆகாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும். என் வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் கற்றக் கொள்ள எதுவுமே இல்லை.
இவ்வாறு இளையராஜா பேசினார்.