ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் மலையாளத்தில் மோகனலோரால் நடித்த நீராளி என்கிற படம் வெளியானது. தமிழில் உதயநிதி நடித்த இப்படை வெல்லும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லா என்பவர் தான் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப்படம் குறித்தும் தன்னை பற்றியும் சோஷியல் மீடியாவில் தவறான செய்திகளை பரப்புவர்களை எச்சரித்துள்ளார் குருவில்லா.
விஷயம் இதுதான்.. சந்தோஷ் குருவில்லாவின் தந்தை இந்தியன் பெந்தகொஸ்தே சபையின் பொருளாளராக பொறுப்பு வகிக்கிறார்.. அதை பயன்படுத்திதான் குருவில்லா தற்போது படம் தயாரித்து வருகிறார் என்று சிலர் சோஷியல் மீடியாவில் கொளுத்தி போட்டுவிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பரவி வரும் இந்த செய்தியை பரப்பியவர்களை கண்டித்துள்ள குருவில்லா, தன் தந்தை பொருளாளர் ஆவதற்கு முன்பே தான் நான்கு படங்களை தயாரித்துள்ளதாகவும், அப்போதிருந்தே வெற்றிகரமான ஒரு பிசினஸ்மேன் ஆக தான் இருந்து வருவதாகவும் தனது முகநூல் பக்கத்தில் கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.