ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வெளிவர இருக்கும் படம் 2.0. பரபரப்பாக பேசப்பட்ட அந்தப் படம், எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியாமல், படத்துக்கு ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்திருக்கும் விநியோகஸ்தர்கள், கொடுத்தப் பணத்தை திரும்பிக் கேட்டு, கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த இயக்குநர் ஷங்கர், பணத்தைத் திரும்பிக் கேட்ட அனைத்து விநியோகஸ்தர்களையும் அழைத்து, படம் தொடர்பாக, அனிமேஷனில், இசை கோர்த்து தான் தயாரித்து வைத்திருந்த படம் பற்றிய தொகுப்பைப் போட்டுக் காட்டி பேசியிருக்கிறார்.
அந்த தொகுப்பைப் பார்த்ததோடு, ஷங்கர் சொன்ன விளக்க வார்த்தைகளைக் கேட்டு, அப்படியே சமாதானமாகி விட்டனர். 'படம் விரைவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்; காத்திருக்கிறோம். அட்வான்ஸ் கொடுத்த பணம் இப்போது திருப்பிக் கொடுக்க வேண்டாம்' என கூறியுள்ளனர். இதனால், ஷங்கர் மற்றும் ரஜினி தரப்பு சந்தோஷம் அடைந்துள்ளது.