‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டிராபிக் ராமசாமி படத்தில் நடித்தவர் உபாசனா. உபாசனாவுக்கு ஆக்சன் ஹீரோயின் ஆகும் ஆசை இருக்கிறதாம். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அப்பா, அம்மா பிறந்தது வங்காளம், நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில். அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர். அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது என்னுடன் இருக்கிறார். நானும் சாப்ட்வேர் இஞ்சினீயர் தான். 2015-ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறேன்.
ஏற்கெனவே கன்னடப் படத்தில் அறிமுகமாகிவிட்டேன். தமிழில் அ 88 என்கிற படத்தின் மூலம் அறிமுகம் ஆனேன். சுமார் 80 விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு. அதனால் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான "வில்லா டூ வில்லேஜ்" நிகழ்ச்சியில் எனக்கு ரியல் பைட்டர் என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது. அதனால் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்சன் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஆசை இருக்கிறது. அடுத்து நான் நடித்துக் கொண்டிருக்கும் "கருத்துக்களை பதிவு செய்" எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன் என்றார் உபாசனா.