‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் 70களின் இறுதியில் வில்லன் நடிகராக நடித்தவர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் மோகன்பாபு. பின்னர் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில் 'மகாநதி' படத்தில் எஸ்.வி.ரங்காராவ் கதாபாத்திரத்தில நடித்திருந்தார். அவருடைய இரு மகன்கள் விஷ்ணு, மனோஜ் இருவரும் தெலுங்கு சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். அவருடைய மகள் லட்சுமி மஞ்சுவும் நடிகையாக இருக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் நடித்தவர் லட்சுமி மஞ்சு. ஆனால், அந்தப் படத்தில் லட்சுமி நடித்த பல காட்சிகளைத் தூக்கிவிட்டார் மணிரத்னம்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஜோதிகா நடிக்கும் 'காற்றின் மொழி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள லட்சுமி, ஜோதிகாவின் நடிப்பைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.
“ஜோதிகாவுடன் பணியாற்றி வருகிறேன்... வாவ்... என்ன ஒரு திறமைசாலி. ஏற்கெனவே அவருடைய தீவிர ரசிகை, தற்போது இன்னும் அதிகமாக. அவருடைய கண்கள் அதிகம் பேசுகின்றன, காமிரா அவரை அதிகம் நேசிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் 'காற்றின் மொழி' படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது.