‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. கடந்த ஒரு ஆண்டாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தான் இந்த ஆண்டு சிறந்த சீரியலுக்கான விஜய் அவார்டையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த பவித்ராவும், வினோதினி என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த வைஷாலியும் விலகியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரு நடிகைகள் விலகி இருப்பது ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வைஷாலிக்கு உடல்நல பிரச்சினை இல்லை என்றும், அவர் 3 மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்கள் கூறியதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. பவித்ரா இதே சேனலில் ஒளிபரப்பாகும் இன்னொரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இருவர் விலகினாலும் அவர்கள் நடித்து வந்த கேடக்டர்கள் தொடர்கிறது. இவர்களுக்கு பதிலாக வேறு நடிகைகள் நடிப்பார்கள் என்கிறது சீரியல் தரப்பு. வைஷாலி, பவித்ரா இடத்தை புதியவர்கள் நிரப்புவார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.