‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்திலிருந்து தமிழ்ப் பக்கம் தாவிய கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினி முருகன்' படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தனுஷுடன் 'தொடரி', மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ', விஜய்யுடன் 'பைரவா', சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் நடித்தார். 'ரஜினி முருகன்' படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தார்.
தற்போது தமிழில் “சாமி 2, சண்டகோழி 2, விஜய்யுடன் ஒரு படம்' என மிகவும் பிஸியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த 'மகாநதி' படம் அவருக்கு அங்கு தனிப் பெயரையும், ஒரு மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஏற்கெனவே தெலுங்கில் அவர் நடித்த 'நேனு ஷைலஜா, நேனு லோக்கல்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது 'மகாநதி'யும் வெற்றிப் படமாக அமைந்துவிட்டதால் அவரைத் தேடி தற்போது பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
'மகாநதி' படக்குழுவினரை ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்பிரபலம் நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். கீர்த்தி தற்போது விஜய் பட ஷுட்டிங்கில் இருப்பதால், சில நாட்கள் கழித்து ஐதரபாத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.