ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
அரசியலில் களம் காண உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார். சமீபத்தில் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். தொடர்ந்து நேற்று காலா படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார். இதில் அரசியல் தொடர்பான விஷயங்களை பெரிய அளவில் பேசவில்லை என்றாலும் தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும் என்றார்.
இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் இந்த ஆலோசனை நடந்தது. இதில் 32 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனது அரசியல் கட்சி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். மேலும் கோவையில் மாநாடு நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டம் முடிந்த பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், ஜூன் 2 ம் தேதிக்குள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த எங்களுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம் என்றனர்.