‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு, திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. வேலைநிறுத்தம் முடிந்த உடனே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார் மணிரத்னம். ஆனால், அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி இருவரது கால்ஷீட்டும் கிடைக்கவில்லை. அதனால் 'செக்க சிவந்த வானம்' படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது.
இந்த வாரம் 'செக்க சிவந்த வானம்' படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கியுள்ளது. அரவிந்த் சுவாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய் உட்பட அனைத்து நடிகர்களின் காம்பினேஷன் சீன்கள் எடுக்கப்பட இருப்பதால் அத்தனை பேருடைய கால்ஷீட்டையும் வாங்கியுள்ளனர்.
யாராவது ஒரு நடிகர் சொதப்பினாலும் மொத்த படப்பிடிப்பும் கேன்சலாகிவிடும் என்பதால் அரவிந்த் சுவாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய் ஆகியோரிடம் நிலைமையை விளக்கி ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டாராம் மணிரத்னம்.
குறிப்பாக சிம்பு கால்ஷீட் சொதப்பிவிடக்கூடாது என்பதற்காகவே அவரை டீல் பண்ணுவதற்காகவே இரண்டு பேரை நியமித்திருக்கிறாராம் மணிரத்னம்.